Showing posts with label plastic bags. Show all posts
Showing posts with label plastic bags. Show all posts

கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பற்றி மத்திய அரசின் முடிவு

Tuesday, September 13, 2011

கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பற்றி மத்திய அரசின் முடிவு




சென்ற இரு வாரங்களுக்கு முன்பு எல்லோரும் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தை பார்த்திருப்போம். அது மத்திய அரசின் முடிவின் காரணமாக இனி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படமாட்டாது என்று. வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை எடுத்து செல்ல தாங்களே பைகளை கொண்டுவர வேண்டும் இல்லை கடைகளில் வாங்கினால் அதற்கு தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டும்.



கடைகளில் இது வரை இலவசமாக கொடுத்து கொண்டு இருந்த பைகளுக்கும் இப்பொழுது பணம் வாங்கத் துவங்கிவிட்டார்கள். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றால் அதற்கு பதிலாக பேப்பர் பைகளை கடைகள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை அதை விட்டுவிட்டு அதற்கு பணம் வசூலிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது சுத்த மடத்தனம்.



இது பெரிய வர்த்தக நிருவணங்களிடமிருந்து வேண்டியதை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக சொல்லி இருப்பதையே காட்டுகிறது. சென்ற வாரம் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் சென்று இருந்தேன். பொருட்களை வாங்கிவிட்டு பை இருக்கிறதா என்றார்கள்? இல்லை என்றதும் பைக்கு 10 ரூபாய் வேண்டுமா என்கிறார்கள். இது பகல் கொள்ளை. பணம் கொடுத்து வாங்கும் பையில் அவர்களது விளம்பரம் வேறு. பெரிதாக பெயரை போட்டுக்கொண்டுள்ளார்கள்.



இதனை பற்றி எங்கும் எதிர்பே வரவில்லை..மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.