பள்ளிகளின் கட்டணங்கள்

Saturday, October 31, 2009

எனது மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக சென்னையில் உள்ள ஏனைய பள்ளிகளின் வலைய தள்ங்களை பார்த்துவிட்டேன். அவர்களின் வித்தியாசமான கட்டணம் தலைசுற்ற வைப்பது போல் உள்ளது. அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

இதில் கேந்திரவித்யாலயா (Kendriya Vidyalaya- KV) எனும் மத்திய அரசு நடத்தும் பள்ளியின் கட்டணத்தையும் காண்பித்துள்ளேன். அதற்கும் தனியார் பள்ளிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். மயக்கமே வரும்!!!!!!

Padma Seshadri School




Padma Seshadri Millinium School



Omega International School



Gateway Internation School
என்னுடன் பணியாற்றும் நண்பரின் பையன் இந்த பள்ளியில் படிக்கிறான். கட்டணம் எவ்வளவு என்று பள்ளியின் வலையதளத்தில் கொடுக்கவில்லை.
source: http://www.gatewaytheschool.in

Kendriya Vidyalaya


மேலே கொடுக்கப்பட்டவை தவிர மற்ற நல்ல பள்ளிகளின் வலையதளங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

தமிழ் நாட்டில் கல்வி முறையை விளக்கும் படம்


சென்னையில் உள்ள பள்ளிகளின் பட்டியலை பார்க்கலாம் என தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்கத்தின் வலையதளத்தை பார்த்த போது மேலே பார்க்கும் படம் கிடைத்தது. ஆனால் சென்னையில் உள்ள பள்ளிகளின் பட்டியல் அதில் இல்லை. மேலும் அதில் உள்ள தகவல்கள் எல்லாம் மிகவும் பழையதாக உள்ளது. இதனை அவ்வப்போது புதுப்பித்தால் தான் தற்பொழுது என்ன நட்க்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரியவரும்.

இதன் இணையதளம் http://www.tn.gov.in/schooleducation/

இதன்பின் மேலும் கிளரியதில் கூகிள் உதவியுடன் இந்த இணையதளத்தை கண்டறிந்தேன்.


நான் என்னுடைய மொத்த பள்ளி வாழ்க்கைக்கு செலவழித்த கட்டணத்தை விட இப்பொழுது ஒரு வருடத்திற்கு ஆகும் கட்டணம் அதிகமாக இருக்கிறது.

முன்பெல்லாம் கிருத்துவர்கள் தான் அதிகமாக பள்ளிகள் நடத்தி வந்தார்கள். அதில் சேர்ப்பது மற்றும் படிப்பது என்பது அப்பொழுது பெருமைக்குரிய விசயமாக இருந்தது. இப்பொழுது அனைவரும் பள்ளிகள் தொடங்கிவிட்டனர். ஆனால் கிருத்துவர்களின் பள்ளி கட்டணங்களை விட இவற்றின் கட்டணங்கள் மிக மிக அதிகமாக உள்ளது.

பள்ளி என்பது சேவை என்பது போய், அது ஒரு நல்ல வியாபாரமாகவே பார்க்கப்படுகிறது. இது பள்ளிகளுக்கு மட்டுமல்ல கல்லூரிகளுக்கும் பொருந்தும். அதனால் தான் அனைத்து அந்நாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகளும், பெரிய ஆட்களும் பள்ளி மற்றும் கல்லூரி ஆரம்பித்து வியாபாரத்தை தொடங்கிவிட்டார்கள்.

முன்பு போலவே கல்வி என்பது அரசாங்கத்தால் மட்டுமே நடத்தப்பட்வேண்டும். மேலும் இது கட்டாய மற்றும் இலவசமாகவே வழங்கப்பட வேண்டும்.

0 comments: